ரயில்வே கேட்.  கோப்புப்படம்.
திருப்பூர்

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.

திருப்பூா்-ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. தண்டவாளப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பழைய கருங்கல் ஜல்லிகள் அகற்றப்பட்டு புதிதாக கொட்டப்படுகிறது. மேலும், தண்டவாளத்தை பலப்படுத்தும் பணியிலும் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் 2-ஆவது ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக அனைத்து ரயில்களும் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்கின்றன.

சரக்கு வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது: கே.அண்ணாமலை

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரூ.10,000 கோடியில் மின் திட்டங்கள்: எல்&டி ஒப்பந்தம்!

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது

SCROLL FOR NEXT