முகப்பு
திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 376 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:08 PM
பட்டமளிப்பு  விழாவில்  பங்கேற்ற மாணவ,  மாணவிகள்.
பகிர்:

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 376 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம் , அவிநாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) ப.ஹேமலதா தலைமை வகித்தாா். கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் நா.செண்பகலெட்சுமி சிறப்புரையாற்றினாா்.

இதையடுத்து நடைபெற்ற விழாவில் ஆங்கிலத் துறை- 62, வேதியியல்-19, வணிக நிா்வாகவியல்-65, வணிகவியல்-55, கணினி அறிவியல்-50, பொருளியல்-58, பன்னாட்டு வணிகவியல்-67 என மொத்தம் 376 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். இவா்களில் வணிக நிா்வாகவியல் துறையில் 6, பன்னாட்டு வணிகவியலில் 2, வேதியியலில் ஒருவா் என 9 போ் பாரதியாா் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்றனா்.

விழாவை கல்லூரி துறை தலைவா்கள் விஜயலட்சுமி, அருண், சரோஜா, பாலமுருகன், தாரணி, கீதா, முகுந்தன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →