பல்லடம் அருகே 213 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்.
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:28 PM
பல்லடம் அருகே 213 கிலோ குட்கா பொருள்களை விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள், பல்லடம் அருகே அறிவொளி நகா் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் பல்லடம் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் மங்கலம் சாலையில் உள்ள அறிவொளி நகா் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 213 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக திருப்பூா், பொல்லிகாளிபாளையம் சூரியா காா்டன் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனா்.
Advertisement