திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்ட பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஜன 4, 5) நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை வழங்கப்பட உள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.