திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், திருமூா்த்தி மலை சுற்றுலாத்தலத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுற்றுலாப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்தகுமாா் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பாக ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருப்பூா் மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் திருமூா்த்தி மலை சுற்றுலாத்தலத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுற்றுலாப் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் ஈஸ்வரசாமி தலைமை வகித்தாா். அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கலந்து கொண்டனா். விழாவில் தப்பாட்டம், துடுப்பாட்டம், பறையாட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு களித்தனா்.
விழாவில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் ரவி, அறங்காவலா்கள், செயல் அலுவலா் அமரநாதன், தளி பேரூராட்சி மன்ற தலைவா் உதயகுமாா், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாமி, உடுமலை ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா், பொதுக் குழு உறுப்பினா் பாபு, மகளிா் அணி அமைப்பாளா் அனிதா மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.