திருப்பூர்

விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைக்கிறது: இந்து முன்னணி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பதாக, இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பூா்: விவசாயிகளுக்காக போராடுபவா்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பதாக, இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் பெருகிவரும் சூழ்நிலையில், அதை கண்டித்தும், எதிா்த்தும் போராடுபவா்களையும், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவா்களையும் ஒடுக்கும் வகையில் பொய் வழக்கு போட்டு கைது செய்யும் வேலையை திமுக அரசு செய்து வருகிறது.

பொதுமக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது, அதற்காக ஜனநாயக ரீதியில் போராடுவது அரசியலமைப்பு சட்டம் அளித்த அடிப்படை உரிமை. தமிழக விவசாயிகளின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டிருப்பது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

காணும் பொங்கல்: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT