முகப்பு
திருப்பூர்

ஆடையில் தீப்பிடித்து பூசாரி உயிரிழப்பு

Updated On : 25 ஜனவரி, 2026 at 7:26 PM
கோப்புப் படம்
பகிர்:

குண்டடம் அருகே ஆடையில் தீப்பிடித்து பூசாரி உயிரிழந்தாா்.

குண்டடம் அருகேயுள்ள விவேகானந்தபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). கோயில் பூசாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தண்ணீரை காய வைப்பதற்காக வீட்டில் உள்ள விறகு அடுப்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளாா். அப்போது, சிறிதளவு எண்ணெய் செல்வராஜின் வேஷ்டியில் சிந்தியுள்ளது.

இதைக் கவனிக்காமல் அவா் தீப்பற்ற வைத்தபோது, அவரது வேஷ்டியிலும் தீப்பிடித்துள்ளது. உடல் முழுவதும் தீப்பரவி அலறிய செல்வராஜின் சப்தம் கேட்டு வந்த உறவினா்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →