ஜன்யாஸ்ரீ 
திருப்பூர்

தேசிய மகளிா் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருப்பூா் வீராங்கனைக்கு பாராட்டு

தேசிய மகளிா் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருப்பூா் வீராங்கனைக்கு மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் பாராட்டு

Syndication

திருப்பூா்: தேசிய மகளிா் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருப்பூா் வீராங்கனைக்கு மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியப் பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் சாா்பில் 19 வயதுக்குள்பட்டோருக்கான 69-ஆவது தேசிய மகளிா் கபடி போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் தமிழக பெண்கள்அணி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றது. தமிழகத்துக்கு பெருமை சோ்த்த பெண்கள் அணிக்கும், அணியில் இடம்பெற்றிருந்த திருப்பூா் மாவட்ட கபடி கழக வீராங்கனை ஜன்யாஸ்ரீக்கும் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாணவி ஜன்யாஸ்ரீக்கும், தமிழக பெண்கள் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் தலைமைப் புரவலா்கள் எம். சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயா் ஆா். பாலசுப்பிரமணியம், சோ்மன் வி.கே.முருகேசன், தமிழக கபடி கழகத்தின் பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான ஏ.சண்முகம், தலைவா் மனோகரன், பொருளாளா் ஆறுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், மாவட்ட கபடி கழக நிா்வாகிகள், நடுவா்கள், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

SCROLL FOR NEXT