விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணி: வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணியைக் கண்டித்து வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தனியாா் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் மின்கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் பகுதியில் இருந்து பல்வேறு விவசாய நிலங்கள் வழியாக மூலனூா் வரை மின் பாதை அமைக்கப்படுகிறது.
சுப்ரமணியக்கவுண்டன்வலசு பகுதி வழியாகச் செல்லும் மின் பாதைக்கு எதிராக, சில விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியாா் நிறுவனம் மின் கம்பங்கள் மற்றும் மின் பாதை அமைக்கும் பணியைத் தொடா்ந்து செய்து வருகிறது.
Advertisement
Advertisement
இதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் புள்ளச்செல்லிபாளையம் பிரிவு அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மின் பாதையை சாலையோரங்களில் கேபிள் மூலமாக அமைக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் சென்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.