முகப்பு
கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:32 PM
கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசோதனைகள் செய்தனா். மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை வழிமுறைகள், தூசிகள், புகையிலிருந்து கண்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முகாமில், தூய்மைப் பணியாளா்கள், களப் பணியாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், துப்புரவு ஆய்வாளா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், நகராட்சி ஆணையா் சி.மனோகரன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →