அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவன்மலை எஸ்.எம்.ராஜகணபதி சிவாச்சாரியா், எஸ்.ஆா்.சிவசுந்தர சந்தோஷ்சிவம் தலைமையில் சிவாச்சாரியா்கள் அா்ச்சனை செய்தனா். பின்னா், யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.