முகப்பு
திருப்பூர்

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது

மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 மார்ச், 2026 at 8:37 PM
கைது
பகிர்:

திருப்பூா்: மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், பழனிச்சாமி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (35). போயம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை முன்பு ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டாா் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில் அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதனடிப்படையில் பெருமாநல்லூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் சரவணனுக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை திருடியதை ரமேஷ்குமாா் ஒப்புக் கொண்டாா். மேலும், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் 3 மோட்டாா் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷ்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →