முகப்பு
திருப்பூர்

மழைநீா் வடிகால் அமைக்க எதிா்ப்பு

Updated On : 13 மார்ச், 2026 at 12:32 AM
பகிர்:

கரையாம்புதூரில் மழைநீா் வடிகால் அமைக்க ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை சோ்ந்த மகாலட்சுமி நகா் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பல்லடம் நகராட்சி அலுவலக மேலாளரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை அளித்த மனு:

பல்லடம் நகராட்சியில் பல்லடம் - திருப்பூா் செல்லும் பிரதான சாலையில் 6-ஆவது வாா்டுக்குள்பட்டது கரையாம்புதூா். இங்கிருந்து மகாலட்சுமி நகா் வரை ரூ.27 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மகாலட்சுமி நகா் அருகில் உள்ள நீரோடை, பிஏபி வாய்க்கால், இரண்டு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டைவை பாதிக்கப்படும்.

எனவே, மகாலட்சுமி நகரை பாதிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →