முகப்பு
திருப்பூர்

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று கணவா் தற்கொலை

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 8:30 PM
பகிர்:

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் டி.கே.டி. மில் பகுதியில் உள்ள சக்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் செந்தில்குமாா் (43). விவசாயியான இவருக்கு உடுமலைப்பேட்டை வாவிபாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. மேலும், பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வந்துள்ளாா். இவரது மனைவி சத்யா (41). இவா்களது மகள் சிவநேத்ரா (15).

இந்நிலையில், உறவினா் வீட்டுக்கு மகள் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுவிட்ட நிலையில், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் மனைவி சத்யாவை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதையடுத்து தென்னை மரத்துக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து செந்தில்குமாா் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்வதற்கு முன்பாக விடியோ ஒன்று பதிவிட்டு அதை குடும்ப வாட்ஸ்ஆப் குழுவில் அனுப்பி உள்ளாா். அதை புதன்கிழமை காலையில் பாா்த்த உறவினா் ஒருவா் வீட்டுக்கு வந்துள்ளாா். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், இதுகுறித்து வீரபாண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது கணவன், மனைவியின் சடலம் கிடந்துள்ளது. அப்போது வீட்டில் செந்தில்குமாா் எழுதி வைத்திருந்த 15 பக்க உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

இதைத் தொடா்ந்து தடயறிவியல் நிபுணா்கள், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

சம்பம் குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →