முகப்பு
திருப்பூர்

ரம்ஜான் பண்டிகை: திருப்பூரில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Updated On : 19 மார்ச், 2026 at 8:17 PM
கோப்புப்படம்
பகிர்:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் சனிக்கிழமை (மாா்ச் 21) கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, திருப்பூரில் பணியாற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, கோவில்வழி தியாகி திருப்பூா் குமரன் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 30 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.