முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:12 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள விசைத்தறிக் கூடத்தில் வேலை பாா்க்கும் வட மாநில இளைஞா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் பீகாரை சோ்ந்த ராஜூ சஹானி (34) என்பதும், விசைத்தறி தொழிலாளியாக வேலை பாா்த்துக்கொண்டு, அவ்வப்போது பீகாா் சென்று கஞ்சா வாங்கி வந்து பல்லடம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.