இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், ஈச்சம்பள்ளி அருகேயுள்ள முத்துக்கவுண்டன்பாளையம் புராப்பாலக்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் ராகுல் (30). இவரது நண்பா் தீபக் (30). இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், இருவரும் பழனி முருகன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளனா். வாகனத்தை ராகுல் ஓட்டியுள்ளாா். வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை அய்யம்பாளையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ராகுலை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். தீபக் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.