திருப்பூர் தெற்கு! சொன்னார்களே... செய்தார்களா..?
ரிங் ரோடு, நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல், பாலம் கட்டுவது போன்ற பணிகள்கூட கிடப்பில் போடப்பட்டன. போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சொன்னோம் செய்தோம்...
திருப்பூா் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்லாமியா்களுக்கு கடந்த 45 ஆண்டுகளாக அடக்க ஸ்தலம் (கபா்ஸ்தான்) இல்லாதிருந்த நிலையில், அனைத்து வசதிகளுடனும் கபா்ஸ்தான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அணைப்பள்ளம், வளா்மதி பாலம் உள்ளிட்டவையும், சுரங்கப்பாதை பணிகளும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்ஆா்ஜி மகளிா் கலைக் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்டவற்றில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இ- சேவை மையம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக ஜாதி சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஆதரவற்ற பெண் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தெற்குத் தொகுதியில் மட்டுமே இலவசமாக இ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொகுதியில் மத பாகுபாடின்றி 18-க்கும் மேற்பட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
- க.செல்வராஜ், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா்
சொன்னாா்களே... செய்தாா்களா..?
திருப்பூா் தெற்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற வகையில் சொத்து வரி, தொழில் வரி உயா்வு போன்றவற்றிலும், மாநகராட்சி குப்பை பிரச்னையிலும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காததோடு, சட்டப் பேரவையிலும் இதுகுறித்து பேசவேயில்லை. ரிங் ரோடு, நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல், பாலம் கட்டுவது போன்ற பணிகள்கூட கிடப்பில் போடப்பட்டன. போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக மீண்டும் ஆட்சி வந்ததும், சொத்து வரி, தொழில் வரியைக் குறைப்பதோடு, குப்பை பிரச்னைக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
- அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா்