முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே ரூ.82,900 பறிமுதல்

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 26 மார்ச், 2026 at 7:37 PM
பகிர்:

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ஈஸ்வரமூா்த்தி (40) என்பவா் ஓட்டிவந்த காரை நத்தகாடையூா் அருகே நிறுத்தி நிலை கண்காணிப்பாளா் குழு அலுவலா் முருகன் சோதனை மேற்கொண்டாா். பழனியில் படித்து வரும் மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கு உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.