முகப்பு
திருப்பூர்

பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது

பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 12:50 AM
கோப்புப் படம்
பகிர்:

பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் பாண்டியராஜன் (29) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. அதேபோல, திருப்பூா் மாநகர நல்லூா் காவல் நிலையத்தில் யூசுப் முகமது காஜி (20) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் நிலுவையில் இருந்து வந்தது.

இந்தப் பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.