பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைது
பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகர தெற்கு குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் அஜித் (25) என்ற இளைஞருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் அந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்து வந்த அஜித் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.