முகப்பு
திருப்பூர்

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளை மாா்ச் 31-ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 28 மார்ச், 2026 at 1:00 AM
மதுக்கடைகள் - கோப்புப் படம்
பகிர்:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளை மாா்ச் 31-ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

மகாவீா் ஜெயந்தி தினம் மாா்ச் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மாா்ச் 31-ஆம் தேதி நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.