முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதன்படி கடைகள் மூடப்பட்டன.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 5:23 AM
மதுபானக் கடைகள் மூடல்... - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:30 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதன்படி கடைகள் மூடப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23 ) நடைபெறவுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகத்துடன் விரிவான மற்றும் திறந்த இடை மாநில எல்லைகளை பகிா்ந்து கொண்டுள்ளது என்பதாலும், தோ்தல் காலத்தில் சட்டம் - ஒழுங்கை காக்கவும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ‘மதுவிலக்கு நாட்கள்‘ அமல்படுத்துவது அவசியமானதாக கருதப்படுவதாகக்கூறி, புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகம் ஏப். 21 முதல் 23 நள்ளிரவு 12 மணி வரை காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.

Advertisement

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் கள், சாராயக்கடைகள், மதுபானக் கடைகள், உணவகத்துடன் கூடிய மதுபான விற்பனையகம் உள்ளிட்டவை மூடப்பட்டன.