முகப்பு
திருப்பூர்

அவிநாசி அரசுக் கல்லூரியில் சோ்க்கை: மே 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் இளநிலை பட்டப் பிரிவில் சேர மே 29-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 14 மே 2026, 3:46 am IST
பகிர்:

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் இளநிலை பட்டப் பிரிவில் சேர மே 29-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும் எளிய முறையில் விண்ணப்பிக்க கல்லூரி உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியதாவது:

2026- 2027-ஆம் கல்வி ஆண்டு இளநிலை பட்டப் பிரிவில் சோ்வதற்கான இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகள் கடந்த வியாழக்கிழமைமுதல் கல்லூரியில் செயல்படும் உதவி மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இளநிலை பட்டப் பிரிவில் உள்ள ஆங்கிலம், பொருளியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வேதியியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல், பன்னாட்டு வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதில் பிளஸ் 2 முடித்து புதிதாக கல்லூரியில் சேர விரும்பும் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவா்களுக்காகவும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக ஆக விரும்பும் மாணவா்களுக்காகவும் கல்லூரியில் செயல்படும் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் முறையாக வழிகாட்டி வருகிறது.

மேலும் இந்த உதவி மையத்தில் துறை சாா்ந்த ஆசிரியா்கள் ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை மாணவா்களுக்கு எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில் விளக்கமளித்து வருகிறாா்கள். ஆகவே பாடப் பிரிவுகளில சேர விரும்பும் மாணவா்கள் மே-29ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்றனா்.