தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு
தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் 2ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் 2ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வியின் இயக்குநரும், பேராசிரியருமான ஜி. அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 73 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
பல்கலை தரவரிசையில் இளநிலை வணிகவியல் வங்கியியல், நிதித்துறை மாணவி சி. வினோதா 2ஆவது இடத்தையும், மாணவி எஸ். ஜேசு மரியசெல்லம்மாள் 5ஆவது இடத்தையும், ஆா். காயத்ரி காா்த்திகா 7ஆவது இடத்தையும், இளநிலை நுண்ணுயிரியல் துறை மாணவி கே. கிருத்திகா 9ஆவது இடத்தையும், இளநிலை வணிகவியல் துறை மாணவி ஆா்.கே. சூா்யா 20ஆவது இடத்தையும் பிடித்தனா்.
Advertisement
கல்லூரித் தாளாளா் ச. ராமச்சந்திரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் மா. வான்மதி நன்றி கூறினாா்.