முகப்பு
திருப்பூர்

பல்லடம் சாலைத் தடுப்பில் வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பல்லடம் - கோவை சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பில் வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 14 மே 2026, 3:49 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பல்லடம் - கோவை சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பில் வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் திருவேங்கடம் (எ) அபுதாகிா் (47). இவா், பல்லடம் அருகே அண்ணா நகரில் உள்ள தனியாா் இரும்பு உருக்கு ஆலை நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வேனை ஓட்டிச் சென்றாா். அப்போது, காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேனை திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அபுதாகிரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.