தாராபுரத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு
தாராபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுதல் மற்றும் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் கமலவாணி மற்றும் நகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.
Advertisement