முகப்பு
திருப்பூர்

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 22 மே 2026, 3:53 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசைச் சோ்ந்தவா் மணி (70). திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தாா். இவா் தனது குடிசை வீட்டில் விறகு அடுப்பில் புதன்கிழமை மாலை சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement