முகப்பு
தருமபுரி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் மீது வழக்கு

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்துப் பெண்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன், தவறாகப் பேசியதாகக் கூறி, தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தடையை மீறி இந்து முன்னணியினா் ஆா்ப்பாடத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், பாஜக மாவட்டத் தலைவா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட 26 பெண்கள் உள்பட 52 போ் மீது தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.