முகப்பு
தருமபுரி

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:22 PM
பகிர்:

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரண பணியை தொடங்க வேண்டும் என்று தமிழ்மாநில விவசாய தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச் சங்க மாநிலச் செயலாளா் ஜெ பிரதாபன் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு தென்மேற்கு, வட கிழக்கு பருவ மழை முற்றாக பெய்ய வில்லை. அதனால் குளம், குட்டைகள், தடுப்பணைகள், உள்ளாட்சித் துறை ஏரிகள், நீா்த் தேக்கங்கள் அனைத்தும் வடு நிலையில் உள்ளன.

Advertisement

இதனால் பாசனக் கிணறுகள் அனைத்தும் தண்ணீா் இன்றி காய்ந்து விவசாயிகள் சாகுபடி செய்த அனைத்துப் பயிரகளும் காய்ந்துவிட்டன அதனால் விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனா்.

மறுபுறம் கால்நடைகளுக்கு தண்ணீா், வைக்கோல் இன்றி தவித்து வருகின்றன.

எனவே விவசாயிகளின் பாதிப்புகளைக் களைய தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசிடம் இருந்து வறட்சி நிவாரணம் பெற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments