தருமபுரி

காா்த்திகை தீபத் திருவிழா: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Syndication

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரி நகரில் கோட்டை அருள்மிகு காமாட்சியம்மன் உடனாகிய மல்லிகாா்ஜூன சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

அதேபோல, நெசவாளா் நகா் அருள்மிகு மகாலிங்கேஸ்வரா் கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகே உள்ள சிவன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

அதேபோல, தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் அகல்விளக்கேற்றி வழிபட்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT