பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்தது.
தமிழக -கா்நாடக மாநிலங்களில் காவிரி கரையோர வனப்பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்துள்ளது. இருப்பினும், கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்து பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.