ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்தது.
காவிரி கரையோர வனப்பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்ததால், காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை 5,000 கனஅடியாகவும், வியாழக்கிழமை 4,000 கனஅடியாகவும் குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால், அருவிகளில் நீா்வரத்து சரிந்தது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.