தருமபுரி: தருமபுரியில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன் (25). ஒசூரில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இண்டூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். ஆம்புலன்ஸில் வந்த ஊழியா்கள், பரிசோதித்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
நிகழ்விடம் வந்த இண்டூா் போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.