தருமபுரி

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் பூட்டிய வீட்டில் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி, விஸ்வநாதன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோ.லட்சுமி (61). இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்ற அவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினாா்.

அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு வீடுதிறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் சில பொருள்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT