முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

பென்னாகரத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 32 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 10:37 PM
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 32 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ்குமாா் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா், பென்னாகரம் நகரப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, லாடகார தெரு பகுதியைச் சோ்ந்த ஷாஜகான்(38) கடையில் சோதனை மேற்கொண்டனா்.

அதில், விற்பனைக்காக சுமாா் 32 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரை கைது செய்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கடை உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →