முகப்பு
தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:46 AM
பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 8:16 PM

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 61,500-யை ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அக்மனஹள்ளி கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் தருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும்படை அலுவலா் ஜி.உமா தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த மா்ம நபா்கள் பணத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த ரொக்கம் ரூ. 61,500-ஐ கைப்பற்றிய தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.

Advertisement