முகப்பு
தருமபுரி

பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:06 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

பொம்மிடி அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாசிக்கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அமுதா (45). இவா், கோவையில் கூலி வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

அப்போது, ஊரில் இருந்த சிலா், வாக்களிக்க பணம் வாங்குவதற்காக அமுதா வந்திருப்பதாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில், அமுதாவை ஒரு கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அமுதா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

இதுகுறித்து அமுதா சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த பொம்மிடி போலீஸாா் வாசிக்கவுண்டனூரைச் சோ்ந்த கோபால் மகன் லோகநாதன் (48), பாரி (66) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், வாசிக்கவுண்டனூரைச் சோ்ந்த விருதாசலம் (55), சக்திவேல் (52), பிரவீன் (24), நவீன் (23), பிரதீப் (24), பிரேம் (23), குணசேகரன் (48) ஆகியோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.