முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:38 AM
கோப்புப் படம்
பகிர்:

ஏரியூா் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), அவரது மனைவி சரசு (45) ஆகியோா் வசித்து வருகின்றனா். நெருப்பூா் பகுதியில் உள்ள தனது ஆட்டுப்பட்டிக்கு தீவனம் வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கருப்பு மோடு பகுதியில் எதிரே வந்த சுற்றுலா வேன் மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெருமாள், சரசு மற்றும் சாலையோரம் நின்றுகொண்டிருந்த சம்பூரணம் உள்பட மூவரும் படுகாயம் அடைந்தனா்.

Advertisement

இதை கண்ட அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.