மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.
சத்திரக்குடி அருகே எஸ்.காரைக்குடி பகுதியில் ராமேசுவரம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை அமைக்கும் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வலது பக்கமாகத் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் சென்ற 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement