முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் ரூ. 90,000 பறிமுதல்

Updated On : 23 மார்ச், 2026 at 6:36 PM
கோப்புப் படம்
பகிர்:

உளுந்தூா்பேட்டையில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ. 90 ஆயிரத்தை தோ்தல் நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரும்பாலை அருகே பழைய சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு - 3 அலுவலா் தமிழரசன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணம் இன்றி ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து பென்னாகரம் பகுதிக்கு பவுனா (38) கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தோஷிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை வழங்கி சரிபாா்க்கப்பட்டு, பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.