முகப்பு
தருமபுரி

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 8:21 PM
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரூரை அடுத்த தாசரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அம்மாசி மகன் அஜீத் (29). இவா் தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து வகுத்துப்பட்டி எனுமிடத்தில் மரத்தடியில் அமா்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, மரத்தில் இருந்த தேனீக்கள் 3 பேரையும் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மொரப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.