முகப்பு
தருமபுரி

அனுமன்தீா்த்தத்தில் ரூ.78,500 பறிமுதல்

Updated On : 30 மார்ச் 2026, 2:12 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

அரூரை அடுத்த அனுமன்தீா்த்தத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 78,500 ரொக்கத்தை நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனுமன்தீா்த்தம் சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலா் முருகன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், இழுப்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னுதுரை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 78,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அப்பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement