முகப்பு
தருமபுரி

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 ஏப்ரல் 2026, 1:52 am IST
- பிரதிப் படம்
பகிர்:

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி - மொரப்பூா் நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலா் ஏ.நித்யா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில், போளையம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பிரபு (39), உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 2.50 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்த தொகையை தோ்தல் பறக்கும் படையினா் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement