தருமபுரி

டிச.29-இல் அஞ்சல்துறைகுறைதீர்க் கூட்டம்

DIN

தருமபுரியில் அஞ்சல் துறை சார்பில், மக்கள் குறைதீர்க் கூட்டம் மற்றும் ஓய்வூதியதாரர் குறைதீர்க் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து, தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ந. கார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரியில் கோட்ட அளவிலான ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் கூட்டம் டிச. 29-ஆம் தேதி காலை 11.30 மணியளவிலும், மக்கள் குறைதீர்க் கூட்டம் அன்றைய தினம் மாலை 3 மணியளவிலும் நடைபெற உள்ளன.
இக் கூட்டத்தில், நுகர்வோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் அஞ்சல் துறை சார்ந்த குறை ஏதெனும் இருப்பின், நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நுகர்வோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனு சார்ந்த அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு, கடிதத்தின் மேல் தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைதீர் கூட்டம் அல்லது ஓய்வூதியதாரரின் குறைதீர்க் கூட்டம் என்று குறிப்பிட்டு வரும்26-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

SCROLL FOR NEXT