தருமபுரி

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி

DIN

தருமபுரியிலுள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் ராஜயோக தியானப் பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால இலவசப் பயிற்சி வரும் 28-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
 இது தொடர்பாக தியானப் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளர் பாக்யா மற்றும் பயிற்சியாளர் ஸ்ரீதேவி ஆகியோர் கூறியது: பள்ளி மாணவ, மாணவியருக்காக வரும் 28-ஆம் தேதி கோடை கால சிறப்புப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளோம். 10 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட இரு பாலரும் இதில் பங்கேற்கலாம்.
 இந்தப் பயிற்சியில் நேர நிர்வாகம், தேர்வு பயத்தைப் போக்குதல், கோபத்தைக் கட்டுப்படுத்துதல், நற்பண்புகளை வளர்த்தல், நேர்மறை சிந்தனைகளை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இத்துடன் தியானப் பயிற்சியும் அளிக்கப்படும். பள்ளி மாணவ, மாணவியர் இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
 முன்னதாக, வரும் 21-ஆம் தேதி பொதுமக்களுக்கான இலவச ராஜயோக தியானப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்விரு பயிற்சிகளிலும் பங்கேற்க முன்பதிவு செய்தல் அவசியம். முன்பதிவு செய்வதற்கான செல்லிடப்பேசி எண்கள்: 9442952653, 9486836141.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

SCROLL FOR NEXT