தருமபுரி

கூத்தாண்டவர் கோயில்  திருவிழா தொடக்கம்

DIN

சாமியாபுரம் கூட்டுச் சாலையில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் காளிப்பேட்டை, மஞ்சவாடி, சாமியாபுரம், பட்டுகோண்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
நிகழாண்டு புதன்கிழமை காலை 10 மணியளவில் கூத்தாண்டவர் சுவாமி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத் தொடர்ந்து,  வியாழக்கிழமை கூத்தாண்டவருக்கு சிறப்பு பூஜையும்,  மாலை 3 மணியளவில் சுவாமியின் தலை இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பிறகு சுவாமிக்கு ஆட்டுக்கிடா பலியிடும் பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சேர்ந்த  ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT