தருமபுரி

சிறப்பு மருத்துவ முகாம்

DIN

அரூர் வட்டம்,  மோப்பிரிப்பட்டி  ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை வருவாய் கோட்டாட்சியர் ரா.கவிதா தொடக்கி வைத்தார். இதில்,   அரசு மருத்துவர்கள் வைரவேல், சரண்யா ஆகியோர் கிராமத்திலுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து,  வீடுகள் தோறும் கொசு மருந்துத் தெளிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியிலுள்ள குப்பைகள்,  பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றப்பட்டன. முகாமில்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோ.ஆனந்தன்,  பெ.கிருஷ்ணன்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிதாஸ்,  சுகாதார ஆய்வாளர்கள் வடிவேல்,  பாரதி, மருந்தாளுநர் கருணாகரன்,  கிராம நிர்வாக அலுவலர்  ஆதிநாராயணன்,  ஊராட்சி செயலர்கள் தளபதி, சிவஞானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT