தருமபுரி அருகேயுள்ள குண்டலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர், மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இத்தம்பதியரின் 2 வயது மகள் வினிஷா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானார். இதற்காக, சிறுமி தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, உயிரிழப்புகள் நிகழாத வகையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.