தருமபுரி

தருமபுரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

DIN

பாஜக தலைவர் அமித் ஷா மகன் மீது நடவடிக்கை எடுக்கக்  கோரி, தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்துப் பேசினார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ராஜாராம் வர்மா, நகரத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் பாடி நாகராஜன், ஏ.குமரசேன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், போலி நிறுவனங்கள் பெயரில் பல கோடி கடன் பெற்று ஊழலில் ஈடுபட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இதில், நிர்வாகிகள் ராஜ வீரப்பன், கனகராஜ், கெளதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT